இலவச நிலம் வழங்கும் திட்டம் இடத்தை தேடும் பயனாளிகள்
இலவச நிலம் வழங்கும் திட்டம் இடத்தை தேடும் பயனாளிகள்
இலவச நிலம் வழங்கும் திட்டம் இடத்தை தேடும் பயனாளிகள்
ADDED : ஆக 03, 2011 01:01 AM
தேனி : நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தில்,பட்டா பெற்ற பயனாளிகள் மூன்று ஆண்டுகளாக இடத்தை தேடி வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் முறைகேட்டில் முடிவடைந்தது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் பெயரில், ஒரு சிலரே நிலங்களை பெற்று ஆதாயம் தேடி உள்ளனர். பல இடங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன.
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ராமுத்தாய், செந்தாமரை ஆகியோர் கலெக்டரிடம் தந்துள்ள மனு: இத்திட்டத்தின் கீழ், 2008 மார்ச் மாதம், பட்டா வழங்கப்பட்டது. இதுவரை நிலம் ஒப்படைப்பு செய்யவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்கு உள்ளது என தெரியவில்லை. இடத்தை அளந்து ஒப்படைக்குமாறு பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. எங்களுக்கு தரப்பட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், வேறு நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே எங்களுக்கு தரப்படட பட்டாவிற்கான நிலத்தை அரசு தர வேண்டும், என கூறியுள்ளனர்.


