/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டுநகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு
புதுக்கோட்டை: விரிவு படுத்தப்பட்டுள்ள புதுக்கோட்டை நகராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.புதுக்கோட்டை நகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டதால் 39 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 37 ஆக குறைந்தது.
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 40 பேர் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த புல்வெட்டாம்விடுதியில் உள்ளது நவீனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.இவர்கள் நாள்தோறும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான மகேந்திரா சீட்டட் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றுக்காலை 9.30 மணிக்கு கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.திருவோணம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்(45) வேனை ஓட்டிச்சென்றார். பிலாவிடுதி அருகே சென்றபோது டிரைவர் சண்முகம் மீது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று சாய்ந்துள்ளார். இதில், டிரைவர் நிலைகுலையவே கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோரம் இருந்த பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது.இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சூரியா(12), யோகப்பிரியா(16), பிரவீண்(10), பிரியா(13), குமரேசன்(11) மனோகரி(9), அஸ்வின் பானு(12) உட்பட 40 பேர் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து விசாரித்துவரும் கறம்பக்குடி போலீஸார், வேன் டிரைவர் சண்முகத்தை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நிலத்தகராறு தொடர்பாக விவசாயியை கொலை செய்த அவரது உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வக்கோட்டை அடுத்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி(55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாணிக்கம்(65) என்பவருக்கும் வீட்டு மனையை அளந்து ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் அப்பகுதியை சர்வே செய்வதற்காக வருவாய்த்துறையினர் சென்றுள்ளனர். ரெங்கசாமியின் வீட்டு மனையை வருவாய்த் துறையினர் அளந்தபோது மாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக இருவருக்கும் இடையே வருவாய்த்துறையினர் முன்னிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரெங்கசாமி தாக்கியதால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் கடந்த 2010 செப்., 4ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீஸார், ரெங்கசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசுந்தரம், கொலை குற்றத்தில் ஈடுபட்ட ரெங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பளித்தார்.


