/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வத்தலக்குண்டில் கோஷ்டி மோதல் : பெண்கள் உட்பட 13 பேர் கைதுவத்தலக்குண்டில் கோஷ்டி மோதல் : பெண்கள் உட்பட 13 பேர் கைது
வத்தலக்குண்டில் கோஷ்டி மோதல் : பெண்கள் உட்பட 13 பேர் கைது
வத்தலக்குண்டில் கோஷ்டி மோதல் : பெண்கள் உட்பட 13 பேர் கைது
வத்தலக்குண்டில் கோஷ்டி மோதல் : பெண்கள் உட்பட 13 பேர் கைது
ADDED : ஜூலை 14, 2011 11:41 PM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அரு கே நடந்த கோஷ்டி மோதலில் எட்டு பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
126 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வத்தலக்குண்டு அரு கே மேலக்கோயில்பட்டியில் கடந்த ஆறு மாதங்களாக பொது இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது. வருவாய்துறையினர்,போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நேற்று முன் தினம் சோலைமலை மனைவி காத்தியம்மாள் இறப்பிற்கு சடங்கு செய்வதற்காக ஒரு பிரிவினர்,மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்கு வந்தனர். இதில் பிரச்னை எழுந்து,இரு பிரிவினரும் கல்வீச்சில் இறங்கினர்.
இருதரப்பிலும் ஆனந்தராஜ்,ராஜம், தாமஸ், ஆரோக்கியசாமி,யோகராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இருதரப்பினரும் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பிலும் 8 பெண்கள் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டனர். 126 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி.,அன்னம் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


