/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இசைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம்தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இசைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இசைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இசைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இசைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
ADDED : செப் 07, 2011 01:57 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள அரசு இசைப்பள்ளி மாணவர்கள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இசைக்கருவிகளை இசைத்தபடி ஊர்வலம் சென்றனர்.சின்னகாஞ்சிபுரம் சி.வி.ராஜகோபால் தெருவில், மாவட்ட அரசு இசைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி, தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை கீழ் இயங்குகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மாதாந்திர கல்வி உதவித் தொகையாக, 200 ரூபாய் வழங்கப்படுமென, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அவருக்கு நன்றி தெரிவித்து, நேற்று, இசைப்பள்ளி சார்பில் பேரணி நடந்தது. பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி, டி.கே.நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, வளத்தீஸ்வரன் கோவில் தெரு வழியாக, கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில், இசைப்பள்ளி மாணவர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற இசைக்கருவிகளை இசைத்தபடி சென்றனர். தலைமை ஆசிரியை ரமணி மற்றும் ஆசிரியர்களும், ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.வழநெடுகிலும், இசைப்பள்ளி மாணவர்கள், இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வினியோகித்தபடி சென்றனர்.


