ADDED : செப் 04, 2011 11:40 PM
நெகமம் : நெகமம் முதல் பல்லடம் செல்லும் ரோட்டின் இரண்டு பகுதிகளில் கோழி
கழிவுகளை வீசிவிட்டு செல்வதால், தூர்நாற்றம் வீசிவருகிறது.
கேரளாவுக்கு
செல்லும் கோழிவண்டிகள், பல்லடத்தில் இருந்து நெகமம் வழியாக கோவில்பாளையம்
வந்து, அங்கிருந்து பாலக்காடு செல்கிறது. கேரளா சென்று இறக்கும்போது, அதில்
இருந்து குறைந்தது 20 கோழிகள் இறந்துவிடுகிறது. இக்கோழிகளை திரும்ப
எடுத்துக் கொண்டு, அதே வழியில் திரும்பி வரும்போது, இறந்த கோழி மற்றும்
கோழி கழிவுகளை சிமெண்ட் சாக்கில் கட்டி, ரோட்டின் இருபக்கங்களிலும் தூக்கி
வீசுகின்றனர். அவ்வழியாக செல்லும் போது, துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு
தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


