/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்புஅரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
செங்குன்றம் : அரிசி ஆலை நெற்களங்களிலிருந்த, எட்டு கொத்தடிமை தொழிலாளர்களை, வருவாய்த்துறையினர் மீட்டனர்.
இந்நிலையில், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி, மாதவரம் தாசில்தார் பாண்டியன், செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் இளவரசி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் செங்குன்றம், தீர்த்தகரையம்பட்டு, வடகரை, விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது செங்குன்றம் தீர்த்தகரையம்பட்டு, சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை மின் வாரிய அலுவலகம் அருகே உள்ள, குருசாமி என்பவருக்கு சொந்தமான நெற்களத்தில், கொத்தடிமை தொழிலாளிகள் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்த கதிர், 35, அவரது மனைவிகள் கஸ்தூரி, 27, அம்முலு, 25, சதீஷ், 15, கஜேந்திரன், 48 அவரது தம்பி சங்கர், 30, இவரது மனைவி சாந்தி, 25, மற்றும் வீரசங்கர், 16, என மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களான செங்கல்பட்டு, சாலவாக்கம், மாமண்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


