/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/முதியவர் கொலை வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறைமுதியவர் கொலை வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
முதியவர் கொலை வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
முதியவர் கொலை வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
முதியவர் கொலை வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 27, 2011 11:38 PM
திருவாரூர்: திருவாரூர் அருகே கொலை வழக்கில் வாலிபருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே குளிக்கரையை சேர்ந்தவர் செல்வம். மின்வாரிய ஊழியர். இவரது மகன் ராஜிவ்காந்தி (27). இவர்களது எதிர்வீட்டை சேர்ந்தவர் முகமதுஅலி (55). இவருக்கும் செல்வத்துக்கு இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி முகமது அலிக்குச் சொந்தமான மரத்தை ராஜிவ்காந்தி வெட்டினார். இதை முகமது அலி தட்டிக் கேட்டார். அப்போது இவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ராஜிவ்காந்தி, முகமது அலியை தாக்கினார். இதில், பலத்த காயம் அடைந்த முகமது அலி இறந்தார். கொரடாச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி இளங்கோ வழக்கை விசாரித்து ராஜிவ்காந்திக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


