Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வாக்காளர்களுக்கு பணம், இனிப்பு வழங்கிய வேட்பாளர் கணவர் கைது

வாக்காளர்களுக்கு பணம், இனிப்பு வழங்கிய வேட்பாளர் கணவர் கைது

வாக்காளர்களுக்கு பணம், இனிப்பு வழங்கிய வேட்பாளர் கணவர் கைது

வாக்காளர்களுக்கு பணம், இனிப்பு வழங்கிய வேட்பாளர் கணவர் கைது

ADDED : அக் 07, 2011 10:52 PM


Google News

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் (சுயே) வேட்பாளரின் கணவர் வாக்காளர்களுக்கு இனிப்பு வழங்கியதாக போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை நகராட்சி 11 வது வார்டு (சுயே.,) வேட்பாளர் அழகுமுத்து.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மேல், இந்த வார்டிற்குட்பட்ட மஜீத் ரோடு 3 முதல் 5வது குறுக்குத்தெருவில் வாக்காளர்களுக்கு, ஓட்டுகேட்டு கால் கிலோ ஸ்வீட் கொடுத்துள்ளார்.அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நவநீதகிருஷ்ணன் எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் சோதனை செய்து, ஸ்வீட் பாக்ஸ்களை மட்டுமே எடுத்து சென்றனர். அதை வினியோகித்த,வேட்பாளரின் கணவர் பிச்சை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். அப்பகுதி பெண்கள் சுவீட் பாக்சுடன், தலா 250 ரூபாயும் வழங்கியதாக டி.எஸ்.பி.,ஸ்டாலினுக்கு, தகவல் கொடுத்தனர்.டி.எஸ்.பி.,உத்தரவுப்படி, வாக்காளர்களுக்கு பணம், இனிப்பு வழங்கியதாக சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்து, வேட்பாளரின் கணவர் பிச்சையை கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us