/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடிவேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி
வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி
வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி
வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி
காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் மனு தாக்கலின் போது ஏற்படும் முக்கிய சம்பவங்களை பதிவு செய்வதற்காக 'கண்காணிப்பு கேமிரா' பொருத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது.
கிடுக்குபிடி: மனு தாக்கலின்போது வரம்பு மீறுதல், நேரம் கடந்து வருதல், தள்ளு முள்ளு, அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு,தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், கட்சி மனு செய்பவர்கள் ஆரவாரம் இன்றி மனு செய்வதின் மூலம் தப்பிக்க வழியுள்ளது. நகராட்சி கமிஷனர் மணி கூறுகையில்,'' மனு தாக்கலின்போது ஏற்படும் சம்பவங்களை கேமிரா மூலம் கண்காணிக்கவும்,அவர்களின் நடவடிக்கை குறித்து ஆராயவும் 'கண்காணிப்பு கேமிரா' பொருத்த தீர்மானித்துள்ளோம். ஒரே நேரத்தில் பல இடங்களில் நடக்கும் சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இம்முறை அமல்படுத்த தீர்மானித்துள்ளோம்'' என்றார்.


