Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி

வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி

வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி

வேட்பாளர்களின் நடவடிக்கை ரகசிய கேமிராவில் பதிவு : காரைக்குடி நகராட்சி அதிரடி

ADDED : செப் 24, 2011 09:59 PM


Google News

காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் மனு தாக்கலின் போது ஏற்படும் முக்கிய சம்பவங்களை பதிவு செய்வதற்காக 'கண்காணிப்பு கேமிரா' பொருத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது.

காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவிக்கு கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க., ), பாண்டிமீனாள் (தி.மு.க., ) ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்., தே.மு.தி.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஓரிரு நாட்களில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க., இப்பதவியை பிடிப்பதில் முணைப்புடன் செயல்படுகிறது. தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. 'ரகசிய கமிரா': மனு தாக்கலின் போது கட்சியினரிடையே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, கடந்த மூன்று நாட்களாக 24 மணிநேரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, கட்சி சார்பில் வேட்பு மனு செய்ய வருபவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அறை, வராண்டா, முகப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கிடுக்குபிடி: மனு தாக்கலின்போது வரம்பு மீறுதல், நேரம் கடந்து வருதல், தள்ளு முள்ளு, அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு,தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், கட்சி மனு செய்பவர்கள் ஆரவாரம் இன்றி மனு செய்வதின் மூலம் தப்பிக்க வழியுள்ளது. நகராட்சி கமிஷனர் மணி கூறுகையில்,'' மனு தாக்கலின்போது ஏற்படும் சம்பவங்களை கேமிரா மூலம் கண்காணிக்கவும்,அவர்களின் நடவடிக்கை குறித்து ஆராயவும் 'கண்காணிப்பு கேமிரா' பொருத்த தீர்மானித்துள்ளோம். ஒரே நேரத்தில் பல இடங்களில் நடக்கும் சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இம்முறை அமல்படுத்த தீர்மானித்துள்ளோம்'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us