/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : பாளை., யில் கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நலவாரிய பதிவின் போது ஜாதி பெயர் கேட்பதை கைவிடவேண்டும். கார்டு புதுப்பிக்க காலதாமதம் ஆனாலும் விபத்து மரணநிதி இயற்கை மரணநிதி, ஓய்வு நிதிகளை வழங்கவேண்டும். இறந்துபோன தொழிலாளியின் அட்டை காணாமல் போனாலும் நகலை காட்டினால் அனைத்து நிவாரணமும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர் சங்கம் பழனிச்சாமி, பொதுத் தொழிலாளர் சங்கம் சுடலைராஜ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மனோகரன், நிர்வாகிகள் வேல்முருகன், ஆறுமுகம், ரவீந்திரன், செந்தில், தமிழ்செல்வன், நடராஜன், சண்முகம், வைகுண்டமணி, வன்னியபெருமாள், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


