/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லைஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லை
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லை
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லை
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லை
ADDED : செப் 09, 2011 10:56 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் வெளி நோயாளிகளாக 500க்கும் மேற்ப்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மருந்தாளுனர் இல்லாததால் நர்ஸ்கள் பணி முடித்தோ அல்லது பணியின் நடுவிலோ வந்து மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டி உள்ளது. அதுவரை நோயாளிகள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். இங்கு நியமிக்கப்படும் மருந்தாளுனரும் ஒரு மாதம் கூட இருப்பதில்லை. ஏதாவது காரணம் கூறி விருப்ப இடத்திற்கு மாறி செல்கின்றனர். எனவே, மருந்தாளுனரை விரைவில் நியமித்து அவரும் நீண்ட நாள் பணியில் நீடிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


