Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ADDED : ஆக 18, 2011 12:45 AM


Google News

இளையான்குடி : இளையான்குடி அருகேயுள்ள இட்டிசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி,31.

இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியத்திற்கும் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவம் செய்வதில் முன் விரோதம் இருந்தது.

ஆக 13 ல் மாலை 5 மணியளவில் ஆரோக்கியத்தின் மனைவி அன்னாள், தனது குழந்தைகளுடன் தாயமங்கலத்தில் இருந்து இட்டிசேரிக்கு திரும்பும் வழியில் சாத்தமங்கலம் அருகே ஆரோக்கியசாமி , அவரது தந்தை சவரிமுத்து, சாத்தமங்கலத்தை சேர்ந்த உறவினர்கள் செபஸ்தி , பிரபு , டென்னிஸ் சேர்ந்து தாக்கியதாக இளையான்குடி போலீசில் அன்னாள் புகார் செய்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அன்னாளின் உறவினர்கள், இட்டிசேரி கிராம மக்கள் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us