Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர் கனகலட்சுமி

பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர் கனகலட்சுமி

பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர் கனகலட்சுமி

பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர் கனகலட்சுமி

ADDED : அக் 06, 2011 11:54 PM


Google News
சாத்தூர் : '' பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன், '' என, வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.கனகலட்சுமி கூறினார்.

சாத்தூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும் அவர் கூறியதாவது: எனது கணவர் திருவேங்கடசாமி, ஊராட்சி தலைவராக இருந்து பல நலப்பணிகளை செய்து, சிறந்த ஊராட்சி விருதை பெற்றுதந்தார். கடந்த தேர்தலின் போது அரசியல் சூழ்ச்சியால், வெற்றி பெற்ற நான், தோற்றதாக அறிவிக்கப்பட்டேன். பின்தங்கிய ஊராட்சியாக இருந்து வருகிறது. வெற்றி பெற்றால் கணவர் வழிகாட்டுதலோடு, முன் மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன். பகுதிக்கும் பாதாளசாக்கடை திட்டம் ,இருக்கன்குடி, சிந்தப்பள்ளி குடிநீர் திட்டங்களை முறைப்படி அமுல் படுத்தப்படுவதோடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். 'மினரல் வாட்டர் பிளாண்ட்' அமைத்து மினரல் வாட்டர் வழங்கப்படும்.குறிஞ்சி நகரில் மின் விளக்கு போடப்படும். என்.ஜி.ஒ.காலனியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் அகற்றப்படும். பொதுகிணறு தூர் வாரப்படும். பாரதிநகர், காந்திநகர், சிதம்பரம் நகரில் குப்பை தொட்டிகள் கட்டி தரப்படும். என்.ஜி.ஓ.காலனி பள்ளியை தரம் உயர்த்த பாடுபடுவேன். அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன்,என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us