ADDED : ஆக 28, 2011 01:20 AM
ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு நடந்தது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் துணைத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மணிபாரதி துவக்கிவைத்தார். வட்டச் செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை வாசித்தார்.


