தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் கமிஷனராக (வட்டாரம்) ராஜாங்கம்
பொறுப்பேற்றுள்ளார்.இதற்கு முன் இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி
யூனியன் கமிஷனராக பணிபுரிந்தவர்.
பணி மாறுதலின் பேரில் தா.பேட்டையில்
பொறுப்பேற்றுள்ளார். அதே யூனியனில் இருந்த ராணி வட்டார வளர்ச்சி அலுவலர்
(பஞ்சாயத்துகள்) அதே யூனியனில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.துணை வட்டார
வளர்ச்சி அலுவலராக (பஞ்சாயத்துகள்) ராஜா பணி மாறுதல் காரணமாக பணி
பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் முசிறி யூனியனில் துணை வட்டார
வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்)பிரிவில் பணிபுரிந்தார்.


