Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒரு கிலோ தங்கத்துடன் இருவர் "எஸ்கேப்'

ஒரு கிலோ தங்கத்துடன் இருவர் "எஸ்கேப்'

ஒரு கிலோ தங்கத்துடன் இருவர் "எஸ்கேப்'

ஒரு கிலோ தங்கத்துடன் இருவர் "எஸ்கேப்'

ADDED : ஜூலை 28, 2011 10:42 PM


Google News
கோவை: ஒரு கிலோ தங்கத்துடன் தலைமறைவான, நகை பட்டறை உரிமையாளர் இருவரை, போலீசார் தேடுகின்றனர்.

கோவை,வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்; நகை கடை உரிமையாளர். இவரிடம், தில்லைநகரைச் சேர்ந்த நகைபட்டறை உரிமையாளர்கள் ஆனந்தகுமார், 34, சுரேந்திரன், 32, ஆகியோர், தங்கத்தை வாங்கி, நகைகளாக வடிவமைத்து கொடுத்து வந்தனர். மே 11ம் தேதி, இவர்களிடம் 1 கிலோ 849 கிராம் தங்கத்தை கொடுத்து, குறிப்பிட்ட தேதிக்குள் நகைகளாக வடிவமைத்து தரும்படி, ரவிசங்கர் கேட்டுக் கொண்டார். கடந்த 22ம் தேதி, 853 கிராம் அளவுக்கு நகைகளை வடிவமைத்து கொடுத்த இருவரும், ஒரு கிலோ நகையுடன் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, ரவிசங்கர், செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இருவரையும் தேடி வரும் நிலையில், போலீஸ் விசாரணையில், ஆனந்தகுமார், கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில், 422 கிராம் தங்கத்தை பெற்று, ஏமாற்றியது தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us