/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடுகாளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு
காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு
காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு
காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு
ADDED : ஆக 22, 2011 12:03 AM
காளையார்கோவில் : காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு
அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றவேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி
வருகின்றனர்.இப்பள்ளி மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பள்ளி முன்பு மீன்,இறைச்சி கடைகளின் கழிவு பொருட்களை வியாபாரிகள்
அப்படியே விட்டு செல்கின்றனர்.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம்
வீசுகிறது. கெட்டுப்போன மீன்கள் , இறைச்சி எலும்புகளை
பறவைகள்,பன்றிகள்,நாய்கள் எடுத்து பள்ளி வளாகத்திற்குள் போட்டு விடுகிறது.
இதை ஆசிரியர்கள், மாணவர்களே அகற்றி வருகின்றனர்.இப்பகுதியில்
சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


