Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு

காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு

காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு

காளையார்கோவில் பள்ளி அருகே கழிவுகளால் சுகாதாரக்கேடு

ADDED : ஆக 22, 2011 12:03 AM


Google News
காளையார்கோவில் : காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றவேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இப்பள்ளி மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பள்ளி முன்பு மீன்,இறைச்சி கடைகளின் கழிவு பொருட்களை வியாபாரிகள் அப்படியே விட்டு செல்கின்றனர்.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கெட்டுப்போன மீன்கள் , இறைச்சி எலும்புகளை பறவைகள்,பன்றிகள்,நாய்கள் எடுத்து பள்ளி வளாகத்திற்குள் போட்டு விடுகிறது. இதை ஆசிரியர்கள், மாணவர்களே அகற்றி வருகின்றனர்.இப்பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us