/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ஆயுர்வேத மருத்து பல்கலை பட்டபடிப்பின் பெயர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் பாய்காட்ஆயுர்வேத மருத்து பல்கலை பட்டபடிப்பின் பெயர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் பாய்காட்
ஆயுர்வேத மருத்து பல்கலை பட்டபடிப்பின் பெயர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் பாய்காட்
ஆயுர்வேத மருத்து பல்கலை பட்டபடிப்பின் பெயர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் பாய்காட்
ஆயுர்வேத மருத்து பல்கலை பட்டபடிப்பின் பெயர் மாற்றம் கண்டித்து மாணவர்கள் பாய்காட்
ADDED : ஆக 25, 2011 01:57 AM
நாகர்கோவில் : ஆயுர்வேத மருத்துவ பல்கலைகழக பட்டபடிப்பின் பெயர் மாற்றத்தை
கண்டித்து குமரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை
புறக்கணித்து போராராட்டம் செய்தனர்.
எம்.ஜி.ஆர். மருத்துவ
பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட திருத்தம், பட்டப்படிப்பின் பெயர் திருத்தம்
ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் நவீன அறிவியல் பாடங்களில் அதாவது
உயிர் வேதியில், உடல் செயலியல், உடற்கூறுகள், அறுவை மருத்துவம், நோய்நாடல்,
நுண்ணுயிரியல், மருந்தியல் என்று அனைத்து விதமான பாடங்களில் திருத்தம்
என்று கூறி பாடங்களின் முக்கிய பகுதிகளை நீக்கியும், சில பாடங்களை
முழுமையாக நீக்கியும், மேலும் அதனையை நடைமுறை படுத்துவதாக பல்கலை கழகம்
அறிவித்திருப்பதற்கு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். அறுவை மருத்துவத்தை மையமாக கொண்டு தங்களது பட்ட
படிப்புகளில் சர்ஜரி என்ற வார்த்தையை நீக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி
கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் மருத்துவ கல்லூரி
முன்பு நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம்
முழுவதும் ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்ட படிப்பின் பெயர் மாற்றம், பாடதிட்ட திருத்தத்தை மீண்டும் பழைய
முறைக்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இதே நிலை தொடர்ந்தால் தங்களால் மேற்படிப்பிலும் சேர முடியாது. மருத்துவ
அங்கீகாரமும் கிடைக்காது என்ற குற்றச்சாட்டை அவர்கள் எழுப்பினர். பாய்காட்
செய்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுடன் கல்லூரி டீன்
ராமகிருஷணாச்சாரியா பேச்சுவார்த்தை நடத்தி வகுப்புக்கு செல்லுமாறு
கேட்டுக்கொண்டார். ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம்
நடத்துவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.


