குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்ய அரசு கண்டிப்பு
குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்ய அரசு கண்டிப்பு
குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்ய அரசு கண்டிப்பு
ADDED : ஆக 19, 2011 01:45 AM
கம்பம் : கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அறிவுறுத்த வேண்டும்.
மேல்நிலைத் தொட்டிகள் பராமரிப்பு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குடிநீர் வடிகால் வாரியத்தின் பணியாகும். எனவே உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் பிரிவு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


