/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இலவச "டிவி'க்கள் காத்திருக்கும் அதிகாரிகள்இலவச "டிவி'க்கள் காத்திருக்கும் அதிகாரிகள்
இலவச "டிவி'க்கள் காத்திருக்கும் அதிகாரிகள்
இலவச "டிவி'க்கள் காத்திருக்கும் அதிகாரிகள்
இலவச "டிவி'க்கள் காத்திருக்கும் அதிகாரிகள்
ADDED : ஆக 11, 2011 12:57 AM
ராமநாதபுரம் : இலவச 'டிவி' க்களை திரும்ப ஒப்படைக்கும் அரசு உத்தரவை எதிர்நோக்கியிருக்கின்றனர் அதிகாரிகள்.
கடந்த ஆட்சியில் அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச 'டிவி'க்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தலையொட்டி 'டிவி'க்கள் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற மற்றும் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டன. இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை செப்.15 முதல் வழங்க இருப்பதால், இலவச 'டிவி'க்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் அதிகாரிகள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1800 பயன்படுத்தக்கூடிய 'டிவி'க்களும், 1300 பயன்படுத்த முடியாத டிவிக்களும் உள்ளன. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேலிடத்தில் இருந்து அதிகாரிகள் வந்து, 'டிவி' குறித்து கணக்கெடுத்து சென்றுள்ளனர். தகுந்த உத்தரவு வரும் வரை பாதுகாக்க அறிவுறுத்தி உள்ளனர், என்றார்.


