Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சோதனைச்சாவடியில் அவதிப்படும் போலீசார்

சோதனைச்சாவடியில் அவதிப்படும் போலீசார்

சோதனைச்சாவடியில் அவதிப்படும் போலீசார்

சோதனைச்சாவடியில் அவதிப்படும் போலீசார்

ADDED : ஆக 22, 2011 12:15 AM


Google News
கம்பம் : கம்பமெட்டு ரோட்டில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில், போலீசார் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இங்குள்ள சோதனை சாவடி சிறிய அறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக வணிகவரி சோதனை சாவடியும், கம்பமெட்டில் வனத்துறை சோதனை சாவடியும் உள்ளன. போலீஸ் சோதனை சாவடி மட்டும் ஒரே ஒரு அறையில் செயல்படுகிறது. போலீசார் தங்களின் உடமைகளை வைக்க மட்டுமே இங்கு இடம் உள்ளது. உட்காரக் கூட இடம் இல்லை. மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டுள்ளதால், பழுதடைந்து பல ஆண்டுகளாகி விட்டது. மழை பெய்தால்,போலீசாரின் உடைகளும் நனைந்து விடும். இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ சந்துகள் சோதனை சாவடிக்குள் புகுந்து விடுகின்றன.கழிப்பறை இல்லை. அவசரத்திற்கு அருகில் உள்ள கயிறு மில் மற்றும் பால்பண்ணைகளுக்கு செல்கின்றனர். சமீபத்தில் பன்றிகாய்ச்சல் தடுப்பு சோதனையில் ஈடுபட்ட பெண் பணியாளர்கள் கழிப்பிட வசதியில்லாததால் அவதிப்பட்டனர். மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் போலீசார் சோதனை சாவடி பணி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம், வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us