ADDED : ஆக 26, 2011 12:16 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில் தச்சநல்லூரை சேர்ந்த ராமலட்சுமி,22, பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தில் பணம் திருடியதாக கூறியதால், மனமுடைந்த ராமலட்சுமி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மொபைல் நிறுவன உரிமையாளர் நாதிர்ஷா(36) மிரட்டியதால் தான், ராமலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைக்க, நீதிபதி விஜயராகவன் உத்தரவிட்டார். அதன்படி, நாதிர்ஷா சிறையில் அடைக்கப்பட்டார்.


