Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

ADDED : செப் 04, 2011 11:44 PM


Google News

கடலூர் : கடலூரில், சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜேந்திரன், பானுமதி, சுந்தரமூர்த்தி, கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலர் அன்பழகன், மாநில துணைத் தலைவர் ராமநாதன் பேசினர். வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் மருதவாணன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன், புரு÷ஷாத்தமன், ஞானக்கண் செல்லப்பா, ராஜேந்திரன், செல்வராஜ் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், 27 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியமாக 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொரு ளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us