Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

ADDED : ஜூலை 14, 2011 12:46 AM


Google News

பெரியதாழை: பெரியதாழை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; பெரியதாழை அருகேயுள்ள சிவன்குடியேத்து கிராமத்தை சேர்ந்தவர் பனைதொழிலாளி முருகேசன்.

இவரது மனைவி சாந்தி. சாந்தி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் பனைதொழிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மனைவி சாந்தியை காணவில்லையாம். தேடி பார்த்தபோது பெருமாள்குளம் அருகேயுள்ள கிணற்றில் கிடந்த சாந்தி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நயினார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us