ADDED : ஜூலை 14, 2011 01:13 AM
திசையன்விளை : திசையன்விளை கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.திசையன்விளை செல்வமருதூர் அடைக்கலம் காத்த விநாயகர் கோயிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
விழாவில் கும்பபூஜை, ஹோமம், வேதபாராயணம், பூர்ணாகுதி, விசேஷ அபிஷேகங்கள், அலங்காரம், விமானம், மூலவர், உற்சவர் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பூஜைகளை கல்யாண கணேசபட்டர் செய்திருந்தார்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


