/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாயபிரச்னை தீர்வுக்கு உயர்நிலை கமிட்டிசாயபிரச்னை தீர்வுக்கு உயர்நிலை கமிட்டி
சாயபிரச்னை தீர்வுக்கு உயர்நிலை கமிட்டி
சாயபிரச்னை தீர்வுக்கு உயர்நிலை கமிட்டி
சாயபிரச்னை தீர்வுக்கு உயர்நிலை கமிட்டி
ADDED : ஜூலை 19, 2011 09:55 PM
திருப்பூர் : மத்திய ஜவுளித்துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள, உயர்நிலை கமிட்டியில் திருப்பூர் தொழில்துறையினரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கடந்த வாரத்தில், தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி னார்.
அப்போது, திருப்பூரில் நிலவும் சாயத்தொழில் பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சாயத்தொழில் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக, செயலர் ரீட்டா மேனன் சென்னைக்கு வந்திருந்தார்.சென்னை தலைமை செயலகத்தில், 18ம்தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உட்பட மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது உயர்நிலை கமிட்டி அமைத்து, மூடப்பட்டுள்ள சாய ஆலைகளை விரைவில் திறக்கவும், அதன் பின் வரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு
காண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.உயர்நிலை கமிட்டிக்கு, மத்திய ஜவுளித்துறை செயலர் ரீட்டா மேனன் தலைமை வகிப்பார். தமிழக தலைமை செயலர் அல்லது அவரது நியமனதாரர், மத்திய நிதிசேவை பிரிவு செயலர், சுற்றுச்சூழல் செயலர் மற்றும் ஜவுளித்துறை இணை செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொழில் நிலவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காக, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் உட்பட ஐந்து பேர் கமிட்டியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.dinamalar tirupur distrisct news


