Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்

போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்

போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்

போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்

ADDED : செப் 01, 2011 11:19 PM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்கி சாப்பிடும் சிறுவர், சிறுமிகளை, பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. வீடுகளில் எவ்வளவு ருசியாக தின்பண்டங்களை பெற்றோர்கள் தயார் செய்து கொடுத்தாலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களையே பள்ளி மாணவ, மாணவிகள் விரும்பி வாங்குகின்றனர். இதை குறி வைத்து, தமிழகத்தில் பல்வேறு பிரபல நிறுவனங்கள் சிப்ஸ், பருப்பு, மிக்சர், பப்புள் கம், வத்தல் ஆகிய வற்றை தயாரித்து பேக் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதில், லேஸ், குர்குரே, பிங்கோ மற்றும் பூமர் ஆகியவை பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். நகர் புறங்களில் மட்டுமன்றி கிராம புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் இவற்றின் விற்பனை அதிகம் இருக்கும். காரணம் இந்த நிறுவனங்கள் 'டிவி'க்களில் செய்யும் விளம்பர மோகமே காரணம்.



பிரபல நிறுவனங்கள் தயார் செய்யும் தின்பண்டங்கள், 5 ரூபாய் மற்றும், 10 ரூபாய் விலையில் பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், தயாரிக்கும் தேதியும், காலாவாதியாகும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த தின்பண்டங்களில் கலக்கும் மசாலா பொடிகள் குறிப்பிட்ட காலத்தை கடந்தால் அது நச்சுத் தண்மையாக மாறிவிடும் என்பதால், அதற்கு காலாவதி தேதி போட்டு விற்பனை செய்வார்கள். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், சுத்தம் மற்றும் உபயோகிப்பாளர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தயாரிப்பதால் இதனை வாங்கி சாப்பிடும் சிறுவர்களுக்கு எந்தவித உடல் உபாதையும் ஏற்படுவதில்லை.



கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நகர் புறங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரை வித்தியாசம் தெரியாமல் மாற்றி அதே போல் பேக் செய்து 'போலி' தின்பண்டங்களை விற்பனை செய்வது, கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கும், நல்ல தின்பண்டங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் போலியானவற்றை வாங்கி அதிகம் சாப்பிடுகின்றனர்.



இவ்வாறு போலியாக தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் தரமற்றதாக உள்ளதால் பல நேரங்களில் சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. போலி தின்பண்ட பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், அதனை வாங்கி உபயோகிக்கும் சிறுவர்கள், வயிறு சம்மந்தமான பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.



பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களை விற்பனை செய்தால், குறைவான லாபம் கிடைப்பதாகவும் ஆனால், அதே பெயரில் ஒரு எழுத்தை மாற்றி விற்பனை செய்யப்படும் போலி பாக்கெட்டுகளை விற்பனை செய்தால், எங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், மனிதர்களை பல்வேறு நோய்கள் தாக்கி வரும் வேளையில் சிறுவர், சிறுமிகளின் உடல் நிலையை சீரழிக்கும் இத்தகைய போலி தின்பண்டங்கள் விற்பனையை சுகாதார துறையினர் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us