/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்வோருக்கு காத்திருக்குது சிறைஉள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்வோருக்கு காத்திருக்குது சிறை
உள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்வோருக்கு காத்திருக்குது சிறை
உள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்வோருக்கு காத்திருக்குது சிறை
உள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்வோருக்கு காத்திருக்குது சிறை
ADDED : அக் 08, 2011 11:00 PM
ராமநாதபுரம் : உள்ளாட்சி தேர்தலில் கலகம் செய்ய முடிவு செய்தவர்களை முன்கூட்டியே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த முறை உள்ளாட்சி தேர்தலின் போது, ஓட்டு பெட்டியை தூக்கி கொண்டு ஓடியவர்கள், கலகம் ஏற்படுத்தியவர்கள் உள்ளிட்டோர் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த முறை கலகம் செய்ய முடிவு செய்தவர்களை முன்கூட்டியே கைது செய்து, எச்சரிக்கை செய்யப்பட உள்ளனர். மேலும் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருப்பவர்கள் தேர்தலில் வெளிவருவர், அவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி.,மகேஷ்குமார் காளிராஜ் கூறுகையில், ''உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடத்துவதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. தேர்தலில் பிரச்னை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


