19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
ADDED : அக் 12, 2011 12:33 AM
டம்பா : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, வட அட்லான்டிக் கடலில், எட்டாயிரம் அடி ஆழத்தில், 19 டன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
வட அட்லான்டிக் கடலில், 1917, பிப்., 9 ல், ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் குண்டு வீச்சால், எஸ்.எஸ்.மன்டோலா என்ற கப்பல் மூழ்கியது.
இக்கப்பலில், 1 லட்சத்து, 11 ஆயிரம் பவுண்டு அன்றைய மதிப்பிலான ஆறு லட்சம் அவுன்ஸ் வெள்ளி இருந்தது. இது கிட்டத்தட்ட, 19 டன்னுக்குச் சமம். இன்றைய மதிப்பில் இந்த, 19 டன் வெள்ளியின் மதிப்பு, ஒரு கோடியே, 90 லட்சம் டாலர் (85 கோடியே 50 லட்சம் ரூபாய்). இக்கப்பலில் இருந்து வெள்ளியை மீட்கும் பணியை விரைவில் ஒடிசி, அடுத்தாண்டு துவக்க உள்ளது. மீட்கப்படும் வெள்ளியில், 80 சதவீதம் ஒடிசி நிறுவனத்துக்குச் சேரும். ஆழ்கடலில் புதைந்து போன இதுபோன்ற கப்பல்களை, இதற்கான சிறப்புக் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பதில் புகழ்பெற்றது. சமீபத்தில், அதே வட அட்லான்டிக் கடலில், 70 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியோடு, 1941ல் மூழ்கிய எஸ்.எஸ்.கெய்ர்சோப்பா என்ற கப்பலை இந்நிறுவனம் தான் கண்டுபிடித்தது. அக்கப்பலில் இருந்து, 160 கி.மீ., தொலைவில் தான் மன்டோலா கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.


