Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சென்றாம்பாளையத்திற்கு தேவை சுகாதார வளாகம்

சென்றாம்பாளையத்திற்கு தேவை சுகாதார வளாகம்

சென்றாம்பாளையத்திற்கு தேவை சுகாதார வளாகம்

சென்றாம்பாளையத்திற்கு தேவை சுகாதார வளாகம்

ADDED : செப் 08, 2011 02:05 AM


Google News

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள சென்றாம்பாளையத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சென்றாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு இரண்டாயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை தேவைகளில் ஒன்றான சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இப்பகுதி மக்களும் சுகாதார வளாகம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கடந்த 11 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு ஊராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால், பொதுமக்கள் திறந்வெளிப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இதனால், கிராமத்தின் நுழைவு பகுதியில் இருந்தே தூர்நாற்றம் வீசிவருகிறது. இப்பகுதியை ஒட்டியே பள்ளிக்கூடமும் உள்ளது. பள்ளி குழந்தைகளும் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தூர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us