தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு
தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு
தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் எழுதிய, சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது: தமிழகத்தில் தன்னலமற்ற பெண்கள் அதிகம். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சரோஜினி வரதப்பன். தன்னை தேடி ஆயிரம் பதவிகள் வந்த போது, அவர் அதை துச்சமாக எடுத்துக் கொண்டார். அவரை பார்த்து யாரும் பொறாமைப் படவில்லை. அவரும் யாரைப் பார்த்தும் பொறாமை படவில்லை. இது தான் அவருடைய தனிச் சிறப்பு. இந்த சுயசரிதையில் அவர் எதையும் மறைக்க வில்லை. வளரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டவே, அவர் ஒளிவுமறைவு இன்றி, தனது சுயசரிதையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவியரின், இசைக் கச்சேரி நடந்தது. மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தாரா கோபால கிருஷ்ணகாந்தி, பள்ளி, கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.


