/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 07, 2011 01:57 AM
காஞ்சிபுரம் : ''தமிழக அரசுத் துறைகளில், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும், உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க காஞ்சிபுரம் மாவட்ட ஒன்பதாவது மாநாடு, காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரவி, மாநாட்டை துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் பேரணி நடந்தது. பேரணி முடிவில், மாநிலப் பொருளாளர் இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக பன்னீர்செல்வம், செயலராக தங்கராஜ், பொருளாளராக உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். தமிழக அரசுத் துறையில், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும், உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை, முறையாக அழைத்து பேசி, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்களில் இருந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு, அலுவலக நேரத்தில் பஸ் வசதி செய்து தர வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், கிராம நூலகர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் உட்பட அனைவரையும், முழு நேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்ட்ட ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசுப் பணியிடங்கள் அனைத்தையும், நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, கல்விப்படி, போக்குவரத்துப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும். அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தை, அரசே ஏற்று வழங்க வேண்டும், என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயலர் லெனின் நன்றி கூறினார்.


