Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் துறை வலியுறுத்தல்

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் துறை வலியுறுத்தல்

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் துறை வலியுறுத்தல்

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் துறை வலியுறுத்தல்

ADDED : செப் 07, 2011 12:38 AM


Google News
உடுமலை : வேளாண்மை துறையில் பதிவு செய்துள்ள சிறு, குறு விவசாயிகள் மண் பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்குமாறு வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) திருமகள்ஜோதி அறிக்கை: அரசு அறிவித்துள்ள இரண்டாம் பசுமை புரட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக உடுமலை வட்டாரத்திலுள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. இந்த தகவல்கள் தற்போது இன்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. துறையில் பதிவு செய்துள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மண் மாதிரிகளை சேகரித்து வரும் செப்., 15ம் தேதிக்குள் உடுமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்தனியாக மண் வளத்தை அறிந்து (பேரூட்டசத்து மற்றும் நுண்ணூட்ட சத்து) அதற்கேற்றார் போல் செயல்திட்டம் வகுத்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மண் மாதிரி எடுக்கும் முறை: நெல், மக்காச்சோளம்,பயறு வகை போன்ற தானியப்பயிர்களுக்கு 15 செ.மீ., ஆழத்திலும், தென்னை, பழமரங்கள் போன்றவற்றிற்கு 2.5 அடி ஆழத்திலும் மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு மாதிரி எடுக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்', என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us