Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : செப் 08, 2011 10:24 PM


Google News
கோவை : வரசித்தி விநாயகர், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

வடவள்ளி-இடையர்பாளையம் ரோடு, இ.பி.,காலனியில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. அன்று காலை 5.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மாலை 6.00 மணிக்கு திருமுறை பாராயணமும் நடந்தது. செப்., 7ம் தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜையும், மாலை 5.00 மணிக்கு இரண்டாம்கால யாக சாலை பூஜையும் நடந்தது.நேற்று காலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், 8.30 மணிக்கு தத்வ ஹோமங்களும், காலை 9.00 மணிக்கு விமானங்களுக்கும் மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சுந்தரேச கனபாடிகள் நடத்தி வைத்தார். காலை 10.30 மணிக்கு 'ஆன்மிகத்தின் மகத்துவம்' சொற்பொழிவும், 11.00 மணிக்கு கோ பூஜையும், மதியம் 12.00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. கோவில் திருப்பணிக்குழு தலைவர் மணிகண்டன், செயலாளர்கள் ஏழுமலை, கோபிநாத், பொருளாளர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us