/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கைசுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை
சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை
சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை
சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை
ADDED : ஆக 06, 2011 10:47 PM
திண்டுக்கல்:மாவட்டத்தில் பயன்படாதநிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை
பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆத்தூர் தாலுகா பிள்ளையார்நத்தம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார வளாகங்களை கலெக்டர் நாகராஜன் ஆய்வு செய்தார்.
பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார்.மாவட்டத்தில், 306 ஊராட்சிகள், 23 பேரூராட்சிகள், நான்கு
நகராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள், பொது சுகாதார வளாகங்களில்
முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு இரண்டு மாதத்திற்குள் முடிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. தாசில்தார் செல்லத்துரை, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்
மோகன்ராஜ், சேகர் உடன் இருந்தனர்.


