ADDED : அக் 12, 2011 01:18 AM
பண்ருட்டி : தந்தை கண்டித்ததால் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டார். பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் 7வது தெரு புதுகாலனியைச்
சேர்ந்தவர் அழகேசன் மகள் கனிமொழி, 15. இவர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு
படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஒழுங்காக சமையல்
செய்யவில்லை என அழகேசன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த கனிமொழி வீட்டில்
இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டார். ஆபத்தான நிலையில் கடலூர் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனிமொழி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


