/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாப்பாட்டில் தூசி விழுந்த தகராறு: தொழிலாளி கொலைசாப்பாட்டில் தூசி விழுந்த தகராறு: தொழிலாளி கொலை
சாப்பாட்டில் தூசி விழுந்த தகராறு: தொழிலாளி கொலை
சாப்பாட்டில் தூசி விழுந்த தகராறு: தொழிலாளி கொலை
சாப்பாட்டில் தூசி விழுந்த தகராறு: தொழிலாளி கொலை
ADDED : ஆக 27, 2011 11:47 PM
தர்மபுரி: பென்னாகரம் அருகே சாப்பாட்டில் தூசி விழுந்த தகராறில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
பென்னாகரம் அடுத்த சின்னபள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (40).
இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிகாமணிக்கும் வழித்தடம் தொடர்பாக முன் விரோம் இருந்தது. கடந்த 24ம் தேதி முருகன் அவரது வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, சிகாமணி அவரது வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்த போதும், அங்கிருந்து பறந்து வந்த தூசி முருகனின் சாப்பாட்டு தட்டில் விழுந்தது. இதில், இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் கோஷ்டி மோதலாக மாறியது. சிகாமணி மற்றும் அவரது ஆதாரவாளர்கள் சேர்ந்து தாக்கியதில், படுகாயம் அடைந்த முருகன் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் பரிதாபமாக இறந்தார். பென்னாகரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


