/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் டாஸ்மாக் பார் ஏலம் இரு கோஷ்டியினர் மோதலால் பரபரப்புபுதுகையில் டாஸ்மாக் பார் ஏலம் இரு கோஷ்டியினர் மோதலால் பரபரப்பு
புதுகையில் டாஸ்மாக் பார் ஏலம் இரு கோஷ்டியினர் மோதலால் பரபரப்பு
புதுகையில் டாஸ்மாக் பார் ஏலம் இரு கோஷ்டியினர் மோதலால் பரபரப்பு
புதுகையில் டாஸ்மாக் பார் ஏலம் இரு கோஷ்டியினர் மோதலால் பரபரப்பு
ADDED : ஆக 30, 2011 12:07 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் டாஸ்மாக் பார்களை குத்தகைக்கு எடுப்பதில் இரண்டு கோஷ்டியினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பார் வசதியுடன் கூடிய 181 டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கிவருகிறது. புதுக்கோட்டை நகரில் மட்டும் 23 பார்கள் உள்ளன. இவற்றை டெண்டர் எடுப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவியது. பிரச்னையை சமாளிக்க கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கடந்த ஒருவாரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததால் போட்டி போட்டு பலர் டெண்டர் கோரியிருந்தனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு டெண்டர் திறப்பதாக இருந்தது. இதற்காக டெண்டர் கோரிய அனைவரும் அடியாட்களுடன் சிப்காட் அருகில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் குவிந்தனர். மாலை ஐந்து மணியாகியும் டெண்டர் திறக்காததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மாக் அலுவலகம் முன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். டெண்டரை திறக்கக் கோரி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற கோஷ்டியினரை போலீஸார் எச்சரித்து வெளியேற்றினர். இதன் டாஸ்மாக் அலவலக வளாகம் நேற்று மாலை பெரும்பரபரப்புக்கு உள்ளானது.


