/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., உறுதிபாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., உறுதி
பாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., உறுதி
பாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., உறுதி
பாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., உறுதி
ADDED : அக் 11, 2011 11:17 PM
பாம்பன் : 'பாம்பன், தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என, ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்து 6வது வார்டில் போட்டியிடும் தங்கச்சிமடத்தை சேர்ந்த அருள்ரோஜ் கூறினார்.
பஸ் சின்னத்தில் போட்டியிடும் அவர், நேற்று பாம்பன் மீன்மார்க்கெட் பகுதியில், ஓட்டு சேகரித்தபோது கூறியதாவது: பாம்பன், தங்கச்சிமடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., அமைய நடவடிக்கை எடுப்பேன். மீன்பிடி துறைமுகம் இல்லாததால், மீனவர்கள் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் சிரமப்படுகின்றனர். எனவே கேரளாவில் உள்ளது போல், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நவீன மயமாக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் அமைக்க பாடுபடுவேன். புதுமடம் பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை வசதி இன்றி பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தரமில்லாத ரோடுகளால் தினமும் ரோதனைதான். எனவே அப்பகுதியில் தரமான ரோடுகள் அமைக்கப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி முழுமையாக மக்களுக்கு செலவிடப்படும். மீனவர்களுக்கு தொழில் தொடங்க வங்கி கடன் உதவி செய்து தரப்படும், என்றார்.


