Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ADDED : அக் 12, 2011 06:09 AM


Google News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, ஸ்ரீ ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சுனில் குப்தாவிடமிருந்து, அறக்கட்டளை பணிகளுக்காக,சவுந்தர்யா 2.25 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார். மும்பையிலிருந்து, சென்னை வந்த சுனில் குப்தா,வட்டி பணம் 21 லட்சம் ரூபாயை கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில், சுனில் குப்தா தகாத வார்த்தைகளால் திட்டியதாக, அறக்கட்டளை மேனேஜர் சஞ்சய் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். சுனில் குப்தாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us