/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'
துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'
துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'
துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'
துடியலூர் : கோவை தடாகம் ரோடு கணுவாயில் சுற்றித்திரியும் முரட்டு குதிரைகள், நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்து ஏற்படுகிறது.
கவுண்டம்பாளையத்தில் சுற்றித்திரியும் குதிரைகளை, அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து தங்கள் கட்டுக்குள் வைத்து, பராமரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், குதிரையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கவுண்டம்பாளையம் நகராட்சி பலமுறை எச்சரித்தது. ஆனால், பலன் இல்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,''குதிரைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவற்றின் உரிமையாளர்களுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டு விட்டது. இதையும் மீறி, குதிரைகளை ரோட்டில் சுதந்திரமாக நடமாடவிட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, குதிரைகளும் பறிமுதல் செய்யப்படும்'' என்றனர். இதே போல, பன்னிமடை, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன. பொதுமக்களை துரத்தும் குதிரைகளை கட்டுப்படுத்த முயற்சிபவர்களை, குதிரைகள் துரத்துகின்றன. இதனால், துரத்துபவர்கள் கீழே விழுந்து காயமடைவதும், குதிரைக் கடி வாங்குவதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.


