/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஆக 09, 2011 02:49 AM
சூலூர் : சூலூர் அருகே இரு வீடுகளில் கதவை உடைத்து பணம், நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலூர், செங்கோடகவுண்டன் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (35); பிட்டர்.
இவர் மனைவி பொன்னம்மாள்; நிறைமாத கர்ப்பிணி. கடந்த 1ம் தேதி இரவு செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்டார். 11.30 மணிக்கு பிரசவ வலியால் பொன்னம்மாள் கணவருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றனர். திரும்பி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 பவுன் நகை மற்றும் ஆறாயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.காரணம்பேட்டை அருகே உள்ள பருவாயை சேர்ந்தவர் வேல்சாமி(58); துணி வியாபாரி. வியாபாரத்துக்கு வெளியூர் சென்று விட்டு கடந்த 4ம்தேதி காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள நகை திருடு போனது
தெரிந்தது.சூலூர் போலீசார் வழக்குகளை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


