Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு

ADDED : ஆக 09, 2011 02:49 AM


Google News

சூலூர் : சூலூர் அருகே இரு வீடுகளில் கதவை உடைத்து பணம், நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலூர், செங்கோடகவுண்டன் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (35); பிட்டர்.

இவர் மனைவி பொன்னம்மாள்; நிறைமாத கர்ப்பிணி. கடந்த 1ம் தேதி இரவு செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்டார். 11.30 மணிக்கு பிரசவ வலியால் பொன்னம்மாள் கணவருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றனர். திரும்பி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 பவுன் நகை மற்றும் ஆறாயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.காரணம்பேட்டை அருகே உள்ள பருவாயை சேர்ந்தவர் வேல்சாமி(58); துணி வியாபாரி. வியாபாரத்துக்கு வெளியூர் சென்று விட்டு கடந்த 4ம்தேதி காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள நகை திருடு போனது

தெரிந்தது.சூலூர் போலீசார் வழக்குகளை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us