/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காங்.,வேட்பாளர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி நோட்டீஸ் : இருவர் கைதுகாங்.,வேட்பாளர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி நோட்டீஸ் : இருவர் கைது
காங்.,வேட்பாளர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி நோட்டீஸ் : இருவர் கைது
காங்.,வேட்பாளர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி நோட்டீஸ் : இருவர் கைது
காங்.,வேட்பாளர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி நோட்டீஸ் : இருவர் கைது
ADDED : அக் 13, 2011 09:27 PM
தேவகோட்டை : தேவகோட்டையில் காங்., சார்பில் வக்கீல் ஜான்சிராணி போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியினர்,'இலங்கை தமிழர்களின் கொடூரமான படங்களுடன் காங்கிரசுக்கா உங்கள் ஓட்டு' என்ற நோட்டீசை சிலம்பணி அக்ரஹாரத்தில் உள்ள வேட்பாளர் ஜான்சிராணி வீடு அருகே விநியோகம் செய்தனர். இதனால் காங்கிரசாருக்கும் நோட்டீஸ் விநியோகம் செய்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரசார் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். வேட்பாளர் ஜான்சிராணி ஏழு பேர் மீது போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. புவனேஸ்வரி பாலமுருகன்,வன்மீகநாதனை கைது செய்து நோட்டீசை பறிமுதல் செய்தனர்.


