Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் 3 ஆண்டுகளில் 34 விபத்துக்கள் :மத்திய அமைச்சர் தகவல்

பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் 3 ஆண்டுகளில் 34 விபத்துக்கள் :மத்திய அமைச்சர் தகவல்

பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் 3 ஆண்டுகளில் 34 விபத்துக்கள் :மத்திய அமைச்சர் தகவல்

பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் 3 ஆண்டுகளில் 34 விபத்துக்கள் :மத்திய அமைச்சர் தகவல்

ADDED : ஆக 11, 2011 01:07 AM


Google News

விருதுநகர் : ''தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் மூன்று ஆண்டுகளில் 34 விபத்துக்கள் நடந்து உள்ளதாக, '' லோக்சபாவில் மாணிக்க தாகூர் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொழில் வணிகத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்திய சிந்தியா பதில் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் மூன்று ஆண்டுகள் நடந்துள்ள விபத்துக்கள், இதன் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து லோக்சபாவில் விருதுநகர் எம்.பி., மாணிக்க தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் , ''2008 -09 ல் 10, 2009-10 ல் 11, 2010-11 ல் 13 என 34 விபத்துகள் நடந்துள்ளன. விபத்து ஏற்படாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு, இதை பின்பற்றவும் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்புகள் இயந்திரமயமாக்கப்பட உள்ளன. பாதுகாப்பு விதிகளின் படி பட்டாசு ஆலைகள் நடக்கின்றனவா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். அனைத்து ஆலைகளிலும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தீபாவளி,தசரா பண்டிகைகளின் போது பாதுகாப்பு குறித்து மக்களுக்கும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடரபாக விளம்பர பலகைகள் மூலமும் அறிவறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us