Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜாமினில் வெளி வந்த "வீரபாண்டி' மற்றொரு வழக்கில் கைது

ஜாமினில் வெளி வந்த "வீரபாண்டி' மற்றொரு வழக்கில் கைது

ஜாமினில் வெளி வந்த "வீரபாண்டி' மற்றொரு வழக்கில் கைது

ஜாமினில் வெளி வந்த "வீரபாண்டி' மற்றொரு வழக்கில் கைது

ADDED : செப் 07, 2011 12:16 AM


Google News
கோவை : நிலமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமினில் வெளி வந்தபோது, மற்றொரு வழக்கில் சேலம் போலீசார் கைது செய்தனர்.

சேலம் போலீசாரால் மூன்று நில மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட மாஜி தி.மு.க.,அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் இவருக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. நேற்று முன்தினம் ஜாமினில் வெளி வரலாம் என எதிர்பார்த்து, சேலம் மற்றும் கோவையைச் சேர்ந்த தி.மு.க.,வினர் சிறை முன் திரண்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் காலை சேலம் புது பஸ் ஸ்டான்ட் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி கொடுத்த நில அபகரிப்புப் புகாரில் வீரபாண்டி ஆறுமுகம் தவிர , கட்சி பிரமுகர்கள், மாஜி வருவாய்துறை அதிகாரிகள் என பலர் கைது செய்யப்பட்டனர். வீரபாண்டி ஆறுமுகத்தை இவ்வழக்கில் கைது செய்ய சேலம் போலீசார், கோர்ட்டில் உத்தரவு பெற்றனர். இந்த உத்தரவு நேற்று முன்தினம் மாலையே கோவை சிறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் நேற்று பகல் 12 மணிக்கு ஜாமின் உத்தரவு,கோவை மத்திய சிறைக்கு தபாலில் வந்தது. இதை பெற்றுக் கொண்ட சிறை நிர்வாகம் 1.30 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை ஜாமினில் விடுவித்தது. சிறைக்குள் இருந்து சிறை வளாகத்துக்குள் மாஜி அமைச்சர் வெளிவந்தபோது, அங்கு தயாராக கைது வாரன்டுடன் நின்றிருந்த சேலம் உதவி கமிஷனர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின், சிறைக்கு வெளியே காத்திருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் டி.வி.,சேனல் வீடியோகிராபர்களை ஏமாற்றிய சேலம் போலீசார், சிறை வார்டன்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கேட் வழியே சேலம் அழைத்துச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us