Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை

ADDED : அக் 07, 2011 10:05 PM


Google News
Latest Tamil News

நாங்க ரெடி!



கடல் கடந்து வந்தனர் வெள்ளையர்;

அடிமையாய் இருக்க

தன்மானம் தடுத்தது நமக்கு;

ஒரு நள்ளிரவில் சுதந்திரக் கொடி பறந்தது!

நம்மை நாமே ஆள

ஜனநாயக கடமை அழைத்தது;

தூரத்தில் இருந்து வந்தார் ஒருவர்;

விரலில் மை வைத்தோம்;

எம்.பி., ஆனார் அவர்!

அடுத்த ஊரில் இருந்து ஒருவர்

எம்.எல்.ஏ., ஆனார்!

அவர்களுக்கு வந்தது ஏற்றம்;

எங்கள் வாழ்வில் இல்லை மாற்றம்!

இதுவரை,

வெளியூர்காரரிடம் ஏமாந்தோம்!

இப்போது, உள்ளூர்காரர்;

நாங்களும் ஆயத்தமானோம்

ஏமாறுவதற்கு!

- ப.சு.

மருதநாயகம், சின்னாளபட்டி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us