
நாங்க ரெடி!
கடல் கடந்து வந்தனர் வெள்ளையர்;
அடிமையாய் இருக்க
தன்மானம் தடுத்தது நமக்கு;
ஒரு நள்ளிரவில் சுதந்திரக் கொடி பறந்தது!
நம்மை நாமே ஆள
ஜனநாயக கடமை அழைத்தது;
தூரத்தில் இருந்து வந்தார் ஒருவர்;
விரலில் மை வைத்தோம்;
எம்.பி., ஆனார் அவர்!
அடுத்த ஊரில் இருந்து ஒருவர்
எம்.எல்.ஏ., ஆனார்!
அவர்களுக்கு வந்தது ஏற்றம்;
எங்கள் வாழ்வில் இல்லை மாற்றம்!
இதுவரை,
வெளியூர்காரரிடம் ஏமாந்தோம்!
இப்போது, உள்ளூர்காரர்;
நாங்களும் ஆயத்தமானோம்
ஏமாறுவதற்கு!
- ப.சு.
மருதநாயகம், சின்னாளபட்டி.


