/உள்ளூர் செய்திகள்/தேனி/குப்பையில்லா நகரம், தினமும் குடிநீர் புதிய உழவர் சந்தை, மக்கள் நல திட்டம் : வேட்பாளர் ராம்தாஸ்குப்பையில்லா நகரம், தினமும் குடிநீர் புதிய உழவர் சந்தை, மக்கள் நல திட்டம் : வேட்பாளர் ராம்தாஸ்
குப்பையில்லா நகரம், தினமும் குடிநீர் புதிய உழவர் சந்தை, மக்கள் நல திட்டம் : வேட்பாளர் ராம்தாஸ்
குப்பையில்லா நகரம், தினமும் குடிநீர் புதிய உழவர் சந்தை, மக்கள் நல திட்டம் : வேட்பாளர் ராம்தாஸ்
குப்பையில்லா நகரம், தினமும் குடிநீர் புதிய உழவர் சந்தை, மக்கள் நல திட்டம் : வேட்பாளர் ராம்தாஸ்
தேனி : தேனியை குப்பையில்லாத நகரமாக மாற்றுவதோடு, தினமும் குடிநீர் சப்ளை செய்யவும், மக்கள் நல திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பேன் என தி.மு.க., வேட்பாளர் கு.ராம்தாஸ் தெரிவித்தார்.
குப்பை இல்லாத நகரம்: தேனியை சுத்தப்படுத்தி குப்பையில்லா நகரமாக மாற்றுவது என் இரண்டாவது பணி. பாரஸ்ட்ரோடு பகுதி மக்களுக்கு புதிய காய்கறிகள் சப்ளை செய்யும் வகையில் புதிய உழவர்சந்தை அமைக்க முயற்சி எடுப்பேன். 13 கோடி ரூபாயில் நடக்கும் புதிய பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணியினை விரைந்து முடிப்பேன். 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளையும் முடித்து எல்லா ரோடுகளையும் சீரமைப்பேன். சுகாதாரம்: திட்டச்சாலைகள் அனைத்தையும் திறந்து நகரில் போக்குவரத்து வசதி செய்வேன். வீரப்ப அய்யனார் கோயில் பாதையை முழுமையாக சீரமைத்து, மினிபஸ், டவுன் பஸ் வசதி உட்பட போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பேன். அழகர்சாமி காலனி, கக்கன்ஜிகாலனி, விஸ்வநாததாஸ் கானியில், ஒண்டிவீரன் காலனிகளில் அடிப்படை வசதிகளை செய்வேன். சுகாதாரத்தையும், போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்துவேன். திட்ட சாலைகளை திறந்து நல்ல முறையில் ரோடு அமைத்து தருவேன். சுடுகாடு வசதிகளை மேம்படுத்தி, மின்தகன மேடை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீறு சமுத்திர கண்மாயினை சீரமைத்து படகு போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.


