/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் : ஆலங்குளம் வேட்பாளர் பேட்டிகிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் : ஆலங்குளம் வேட்பாளர் பேட்டி
கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் : ஆலங்குளம் வேட்பாளர் பேட்டி
கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் : ஆலங்குளம் வேட்பாளர் பேட்டி
கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் : ஆலங்குளம் வேட்பாளர் பேட்டி
ADDED : செப் 27, 2011 09:19 PM
சிவகங்கை : ''நேர்மையான முறையில் தேசிய வேலை உறுதி திட்ட பணிகள் செய்யப்படும்,'' என, ஆலங்குளம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் எஸ்.ராதா செங்குட்டுவன் உதவி தேர்தல் அலுவலர் எஸ்.ஜஹாங்கீரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறியதாவது: ஆலங்குளம் ஊராட்சி புதுப்பட்டியில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கொண்டுவரப்படும்.
மக்கள் தொகை அதிகமுள்ள இந்திரா நகர் மட்டுமின்றி ஊராட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் ரோடு, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்துதரப்படும். கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிராம ஊராட்சி சார்பில் முழுமையாக செய்துதரப்படும் என்றார்.


