ADDED : செப் 04, 2011 11:21 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
சங்கராபுரத்தில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று காலை கடைவீதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சங்கராபுரம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. தாசில்தார் கோகுலபத்மநாபன், துணை தாசில்தார் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் டி.எஸ்.பி., லோகநாதன், சங்கராபுரம் இன்ஸ்பெக் டர் ரவி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


