Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் காங்., வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும் பீட்டர் அல்போன்ஸ் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் காங்., வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும் பீட்டர் அல்போன்ஸ் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் காங்., வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும் பீட்டர் அல்போன்ஸ் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் காங்., வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும் பீட்டர் அல்போன்ஸ் கணிப்பு

ADDED : அக் 08, 2011 01:13 AM


Google News

கடையநல்லூர் : 'தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்.,வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும்' என தமிழக காங்., பொது செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூரில் காங்., வேட்பாளராக போட்டியிடும் சந்திரா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட காங்., துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர காங்., தலைவர் காளிராஜ், வட்டார காங்.,தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்., துணைத் தலைவர் இடைகால் மாரியப்பன், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசரஸ்வதி, மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், அத்துல்லாயூசுப், நகர காங்., செயலாளர்கள் சமுத்திரம், பட்டு, ரவி, சுவாமிநாதன், முன்னாள் நகர காங்.,தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், மாவட்ட காங்., துணைத் தலைவர் வி.டி.ஆர். முருகேசன், மாவட்ட காங்., பொருளாளர் குலாம் முகைதீன் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் தமிழக காங்., பொது செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:-''தமிழகத்தில் நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்., கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் எல்லா நகராட்சிகளிலும் போட்டியிட வாய்ப்புள்ளது என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் களத்தில் காங்., கட்சிதான் வலிமை பெற்ற கட்சியாக அமைந்துள்ளது.மத்திய அரசு செய்த சாதனைகளை மக்கள் மத்தியில் கூறி ஓட்டுகளை சேகரியுங்கள். அரசியல் என்பது ஒரு தேர்தலோடு முடிந்துவிடக்கூடிய பயணமல்ல. அது முடிவில்லா பயணமாகும். சோதனை காலத்தில் தேர்தல் களத்தில் காங்., வேட்பாளர்களாக நிற்கின்ற அனைவரையும் மனமாற பாராட்ட வேண்டும். வெற்றி, தோல்வியை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது.கடந்த சட்டசபை தேர்தலில் தென்காசி, செங்கோட்டை நகராட்சிகளை காட்டிலும் கடையநல்லூர் நகராட்சியில் காங்., கட்சி அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. இப்போதெல்லாம் தேர்தல் என்றாலே பணம் என்ற காலகட்டத்தில் தான் இருக்ககூடிய நிலையாகிவிட்டது. இருந்தபோதிலும் காங்., கட்சி வேட்பாளர்கள் கடந்த முறை இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகளை மீண்டும் எடுத்துச் சொல்லுங்கள்.கடையநல்லூர் நகராட்சியை பொறுத்தவரை நகராட்சி மட்டுமின்றி தொகுதியளவில் பலகோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டுள்ளது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்., வலிமை பெற்ற இயக்கமாக பிரகாசிக்கும்'' என்றார்.கூட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி காங்., வார்டு வேட்பாளர்கள், நகராட்சி தலைவர் காங்., வேட்பாளர் சந்திரா கணேசன் ஆகியோரை பீட்டர் அல்போன்ஸ் அறிமுகம் செய்து வைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us